கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி

கோவை வ.உ.சி மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இதழாளர் – கலைஞர் குழுவின் சார்பில், இதழாளர் – கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சி துவங்கப்பட்டது.


கோவை: கலைஞரின் பல்வேறு பரிமாணம், தமிழ் அறிஞர்களுடன், அரசியல் ஆளுமைகளுடன், பிரதமர்களுடன் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.



கோவை வ.உ.சி மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இதழாளர் – கலைஞர் குழுவின் சார்பில், இதழாளர் – கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சி துவங்கப்பட்டது.



இக்கண்காட்சியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, இதழாளர் – கலைஞர் நூற்றாண்டு விழாக் குழுத் தலைவரும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருமான சாமிநாதன், விழாக் குழு இணைத் தலைவர், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழாக் குழு இணைத் தலைவர், பால்வளத்துறை மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் தலைவர் டாக்டர்.பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் திறந்து வைத்தார்.



இப்புகைப்படக் கண்காட்சியில் கலைஞரின் பல்வேறு பரிமாணம், தமிழ் அறிஞர்களுடன், அரசியல் ஆளுமைகளுடன், பிரதமர்களுடன் கலைஞர், குடியரசு தலைவர்களுடன் கலைஞர் உள்ளிட்ட தலைப்புகளில் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.



இக்கண்காட்சி ஒரு மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இதழாளர் கலைஞர் குழுவின் உறுப்பினர்கள், என்.ராம்(ஹிந்து நாளிதழ்), நக்கீரன் கோபால், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...