கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி

கோவை வ.உ.சி மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இதழாளர் – கலைஞர் குழுவின் சார்பில், இதழாளர் – கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சி துவங்கப்பட்டது.


கோவை: கலைஞரின் பல்வேறு பரிமாணம், தமிழ் அறிஞர்களுடன், அரசியல் ஆளுமைகளுடன், பிரதமர்களுடன் எடுத்த புகைப்படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.



கோவை வ.உ.சி மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, இதழாளர் – கலைஞர் குழுவின் சார்பில், இதழாளர் – கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சி துவங்கப்பட்டது.



இக்கண்காட்சியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, இதழாளர் – கலைஞர் நூற்றாண்டு விழாக் குழுத் தலைவரும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருமான சாமிநாதன், விழாக் குழு இணைத் தலைவர், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழாக் குழு இணைத் தலைவர், பால்வளத்துறை மனோ தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் பாரதிய வித்யா பவன் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள் தலைவர் டாக்டர்.பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் திறந்து வைத்தார்.



இப்புகைப்படக் கண்காட்சியில் கலைஞரின் பல்வேறு பரிமாணம், தமிழ் அறிஞர்களுடன், அரசியல் ஆளுமைகளுடன், பிரதமர்களுடன் கலைஞர், குடியரசு தலைவர்களுடன் கலைஞர் உள்ளிட்ட தலைப்புகளில் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.



இக்கண்காட்சி ஒரு மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, இதழாளர் கலைஞர் குழுவின் உறுப்பினர்கள், என்.ராம்(ஹிந்து நாளிதழ்), நக்கீரன் கோபால், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...