வறட்சி நிவாரண நிதியில் கோவைக்கு அதிகபடியாக ரூ.180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை மாநகர மாவட்ட செயலாளர் அருண்குமார் நீக்கப்பட்டதை அடுத்து புதிய செயலாளராக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, இன்று அமைச்சர் எஸ்.பி,வேலுமணி முன்னிலையில் அம்மன் அர்ஜுனன் பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிகழ்ச்சியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், கோவைக்கு அறிவிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நாளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கோவை வர உள்ளார்.

தொடர்ந்து, கோவைக்கு அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் தற்போதைய ஆட்சியில் நிறைவேற்றப்படும். வறட்சி நிவாரண நிதியில் கோவை மாவட்டத்திற்கு அதிகபடியாக 180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், தென்னை விவசாயத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மேலும், வரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டுமானால் தற்போதைய ஆளுங்கட்சி தான் வெற்றி பெற வேண்டும்.

மேலும், திமுக-வே நமக்கு எதிரி எனவும், ஒற்றுமையாக இருந்து ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைக்கு வக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...