விதை நெல் விற்பனை நிலையங்களில் துணை இயக்குனர் ஆய்வு - ரூ.11 லட்சம் மதிப்பிலான நெல் விதை விற்க தடை

தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


திருப்பூர்: தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்த ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையிலான குழுவினர்,சுமார் ரூ.11 லட்சம் மதிப்பிலான 36,500 கிலோ எடை அளவிலான விதையை விற்பனை செய்ய தடை விதித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் பெ.சுமதி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



ஆய்வின் போது விதை விற்பனை உரிமம், விதை இருப்பு மற்றும் விலை விபரப்பலகை, விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், விதை விற்பனை பட்டியல், உணர்மை நிலை விதைகளுக்கான, விதையின் ஆதாரத்திற்கான ஆவணங்கள், வயல் மட்ட பதிவேடு, விதை சுத்திப் பதிவேடு, முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் விதை சுத்திகரிப்பு செய்யும் எந்திரங்களை பார்வையிட்டு விதை மிதவை அளவு விதைகள் மற்றும் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன் ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின் போது விதை இருப்பிற்கும் புத்தக இருப்பிற்கும் வேறுபாடு, உண்மை நிலை விதைகளுக்கான விதையின் ஆதாரத்திற்கான ஆவணங்கள், வயல் மட்ட பதிவேடு, விதை சுத்திப் பதவேடு, முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை இல்லாத விதைகள் மற்றும் விற்பனை பட்டியல் முறையாக பாராமரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் சுமார் ரூ.11 லட்சம் மதிப்பிலான 36,500 கிலோ எடை அளவிலான விதையை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

இதுபற்றி துணை இயக்குனர் சுமதி கூறியதாவது, விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் போது விற்பனை ரசீது கொடுக்கப்பட வேண்டும். அதில் விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயின் பெயர் மற்றும் முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும். மேற்கூறிய விதை விற்பனை தொடர்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச் சட்டம் 1966 விதை விதிகள்1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் மீது விதி மீறல் ஆகும். இது போன்ற விதை விற்பனை விதிமீறலகள் கண்டறியப்படும் பட்சத்தில் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது "கடும் நடவடிக்கை" எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...