மாணவர்கள் மத்தியில் ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

கோவை பார்க் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி, TAARK Equipment பிரைவேட் லிமிடெட் இடையே ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


கோவை: வேளாண் துறை மாணவர்கள் வேளாண்மையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வு கொடுக்கும் வகையில் அவர்களின் ஆராய்ச்சிகள் அமைந்திருக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் வேளாண்மை பொறியியல் துறை, புவிசார் பொறியியல் துறைகளின் சங்கம் துவக்க விழா மற்றும் TAARK Equipment பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் ஆராய்ச்சி & மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் Oct 17 2023 அன்று பார்க் கல்வி வளாகத்தில் நடைபெற்றது.

Dr. லக்ஷ்மணன், முதல்வர், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வரவேற்புரை வழங்கினார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கிடைக்கும் பயன்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



இந்த விழாவினை தலைமையேற்று நடத்திய பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷா ரவி தனது உரையில் 2020 ஆண்டு இந்த துறையின் முதல் சங்க துவக்க விழாவில் இந்தியாவின் நிலவு மனிதர் Dr. மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டதை நினைவு கூர்ந்தார்.

வேளாண் துறை மாணவர்கள் வேளாண்மையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வு கொடுக்கும் வகையில் அவர்களின் ஆராய்ச்சிகள் அமைந்திருக்க வேண்டும் என்றார். உயிரினங்கள் வாழ்வதற்கான மாசில்லா சுற்றுச்சூழல் உருவாக்க துணை நிற்க வேண்டும் என்றார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்கள் வேளாண் உபகரணங்கள் ஆராய்ச்சியிலும், பயன்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



மேலும் தனது உரையில் இந்தியாவுக்கான பணமா நாட்டின் தூதர் மற்றும் தூதரக ஜெனரல் யாசியேல் புரில்லோ, பனாமா நாட்டில் மரங்கள் வாழ்வதற்கு சட்ட உரிமை கொடுப்பதாகவும், நாமும் நமது நாட்டின் மரங்களை காக்க வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வருகை புரிந்த TAARK நிறுவனத்தின் மேலாளர் கிருஷ்ண பிரசாத், வேளாண்மையில் ஆர்வம் கொண்டு வேளாண் பொறியியல் துறையில் பயிலும் மாணவர்களை வாழ்த்தினார்.

மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக TAARK நிறுவனம் தனது முழு ஒத்துழைப்பை கொடுக்கும் என்று கூறினார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...