வால்பாறையில் மின்கம்பத்தில் மோதிய கல்லூரி பேருந்து - சிறு காயங்களுடன் ஓட்டுநர் உயிர் தப்பினார்

கோவை மாவட்டம் வால்பாறை நடுமலை சாலையில் தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில், உயர் அழுத்த மின் கம்பம் முறிந்து சாலையில் விழுந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கல்லூரி பேருந்து மோதிய மின் கம்பம் முறிந்து சாலையில் விழுந்த விபத்தால், வால்பாறை நகரமே இருளில் மூழ்கியது.



கோவை மாவட்டம் வால்பாறை நடுமலை சாலையில் தனியார் கல்லூரி பேருந்து உயர் அழுத்த மின் கம்பத்தில் மேல் மோதியதில் கம்பம் முறிந்து சாலையில் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பேருந்தில் வந்த கல்லூரி மாணவர்கள் முன் கூட்டியே இறங்கியதால் பதிப்பு இல்லை. பேருந்து ஓட்டுனர் சிறிய காயத்துடன் தப்பினார். இந்த விபத்தின் காரணமாக இந்த வழியில் செல்ல கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்து செல்ல முடியாமல் உள்ள நிலை ஏற்பட்டு உள்ளது.



இதன் காரணமாக நடுமலை, பச்சமலை, கருமலை, அக்காமலை, போன்ற எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி குழந்தைகள் நடந்து சென்று எதிரே வரும் வாகனத்தில் செல்கின்றனர்.



மின் கம்பதை அகற்றி போக்குவரத்தை சரி செய்வதற்கு காவல் துறையின் மின் துறையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...