உடுமலை அருகே மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நிவாரணம் வழங்கினர்.


திருப்பூர்: மேற்கூரை இடிந்த விபத்தில் உயிரிழந்த மூவருக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதி வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மடத் துக்குளம் வட்டம், கொழுமத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து பலியான முரளி ராஜா, கௌதம், மணிகண்டன் ஆகிய 3 பேரின் குடும் பத்தினருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி பலியானவர்களின் குடும் பத்தினரை நேரில் சந்தித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். ஆதி திராவிடர் நலத்துறைஅமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங் கினர். இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...