கோவையில் பி.பிபார்ம் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பி.பிபார்ம் முதலாமாண்டுமாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


 கோவை: முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி குறித்து ஏற்படும் சந்தேகங்களுக்கு முதல் நாளே பேராசியர்கள் விளக்கமளித்தனர்.

ஒத்தக்கால்மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பி.பிபார்ம் முதலாமாண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர், முனைவர் S .மோகன் மருந்து தயாரிப்பு துறையில் மாணவர்களின் பங்களிப்பு பற்றி பேசினார். மேலும் கற்பகம் கல்வி குழுமத்தின் PRO ஆதிபாண்டியன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். இதை தொடர்ந்து முனைவர் C.S. கந்தசாமி வரவேற்புரை அளித்தார். கல்லூரியின் ஆராய்ச்சி துறை இயக்குனர் முனைவர் A. நாகராஜன் பாராட்டு உரை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பி.பார்ம் வேலைவாய்ப்பு பற்றி முனைவர் M. கற்பகவல்லி மற்றும் கல்லூரியின் சாதனைகளை பற்றி முனைவர் S. ராம்காந்த் பேசினார்கள்.

கல்லூரியில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பற்றி முனைவர் A. மாதேஸ்வரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் 100 மாணவர்களும் 300 பெற்றோர்களும் கலந்துகொண்டு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் கல்லூரி முதல்வர் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து நன்றி உரையை முனைவர் சசிகலா பேசினார்.

Newsletter

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...