திருப்பூர் அருகே சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

திருப்பூர் மாவட்டம் அழகுமலை அடுத்த பாளையம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.


 திருப்பூர்: திருப்பூர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக புகார் எழுந்த நிலையில் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அழகுமலை அடுத்த மலைபாளையம் கிராமம் உள்ளது இந்த பகுதியில் பாலசுப்ரமணியம் என்பவர் தோட்டத்தில் கன்று குட்டி மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த நிலையில் திடீரென்று அலறல் சத்தம் கேட்டுள்ளது பின்னர் அங்கு வேலை செய்யும் வட மாநில தொழிலாளியான விஜய் நேரில் சென்று பார்த்தபோது உடலில் நக காயங்கள் இருந்துள்ளது பின்னர் நாய் கடித்திருக்குமோ என்ற எண்ணத்தில் பெரிதாக எண்ணாமல் மருத்துவருக்கு தகவல் சொல்லிவிட்டு அவர் தோட்டத்து வேளையில் ஈடுபட்டிருந்தார்.

பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கன்று குட்டியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது அப்போது கன்று குட்டிக்கு அருகில் சிறுத்தை இருந்ததைக் கண்ட வட மாநில தொழிலாளி விஜய் கூச்சலிட்டு கொண்டு தோட்டத்தில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் தோட்டத்து உரிமையாளர் உடனே சென்று பார்த்த போது அங்கிருந்து சிறுத்தை அங்கிருந்து மாயமாகிறது பின்னர் அக்கம்பக்கத்தினர் தகவல் அறிந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர் கூடிய நிலையில் வனத்துறையினர் மற்றும் அவிநாசி பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கன்று குட்டியை ஆய்வு செய்து அந்த தோட்டம் முழுவதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்ன ஆய்வு செய்தனர்.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ சாமிநாதன் அப்பகுதியில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த விஜய் இடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுரை கூறி சென்றார் சிறுத்தையின் நடமாட்டத்தை தொடர்ந்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...