மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான எல்.இ.டி விழிப்புணர்வு - கோவை மாவட்ட ஆட்சியர் தொடக்கம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் மக்கள் தொடர்பு துறையின் எல்.இ.டி வாகனத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடங்கி வைத்தார்.


கோவை: வாகனத்தில், மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன?, மழை நீரை எவ்வாறு சேகரிக்க வேண்டும், மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவங்கள், மழைநீர் சேகரிப்புக்காக அரசாங்கம் எடுக்கும் முன்னெடுப்புகள், என்பது குறித்து குறும்படங்கள் திரையிடப்படுகிறது.



தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் மக்கள் தொடர்பு துறையின் எல்.இ.டி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.



இந்த வாகனத்தில், மழைநீர் சேகரிப்பு என்றால் என்ன?, மழை நீரை எவ்வாறு சேகரிக்க வேண்டும், மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவங்கள், மழைநீர் சேகரிப்புக்காக அரசாங்கம் எடுக்கும் முன்னெடுப்புகள், என்பது குறித்து குறும்படங்கள் திரையிடப்படுகிறது.



இந்த வாகனம் இனிவரும் நாட்களில் கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வாகனத்தில் திரையிடப்பட்ட விழிப்புணர்வு வீடியோவை பொதுமக்கள் அனைவரும் பார்த்துச் சென்றனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...