வால்பாறை வழியாக கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

மழை காரணமாக அம்பலப்பாறை என்ற இடத்தில் சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை உடைந்து சேதம் அடைந்துள்ளதால், அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.


கோவை: சாலையை சரி செய்யும் வரை வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் செல்ல வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி உள்ளது. இந்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும், மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதில் வால்பாறையில் இருந்து 80 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகள் பார்க்க செல்லுகின்றனர்.



இந்நிலையில் நேற்று அதிரப்பள்ளி வன பகுதியில் பெய்த கனமழையால் அம்பலப்பாறை என்ற இடத்தில் சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு சாலை உடைந்து சேதம் அடைந்தது.

இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை சரி செய்யும் வரை வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று திருச்சூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...