நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் - கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரசிகர்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 95வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களை கௌரவப்படுத்தும் விதமாக மூத்த ரசிகர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் இயக்கம் சார்பில், சிவாஜி கணேசன் அவர்களின் 95வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோவை காந்தி பார்க் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவாஜி சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற செயலாளர் எம்எல் கான் அவர்கள் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டார். சிவாஜி கணேசனின் அவர் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி புகழ்ந்து பேசினார்கள். சிவாஜி கணேசனின் ரசிகர்களை கௌரவப்படுத்தும் விதமாக மூத்த ரசிகர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.



பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை மற்றும் பண உதவி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிவாஜி செல்வகுமார், ராஜகோபால், புஷ்பராஜ், கண்ணன், கிருஷ்ணவேணி, சிவாஜி லோகு, ராதாகிருஷ்ணன் மற்றும் சிவாஜியின் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...