நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் - கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரசிகர்கள்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 95வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் இயக்கம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களை கௌரவப்படுத்தும் விதமாக மூத்த ரசிகர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

கோவை மாவட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மக்கள் இயக்கம் சார்பில், சிவாஜி கணேசன் அவர்களின் 95வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கோவை காந்தி பார்க் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவாஜி சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்ற செயலாளர் எம்எல் கான் அவர்கள் சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டார். சிவாஜி கணேசனின் அவர் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி புகழ்ந்து பேசினார்கள். சிவாஜி கணேசனின் ரசிகர்களை கௌரவப்படுத்தும் விதமாக மூத்த ரசிகர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.



பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை மற்றும் பண உதவி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிவாஜி செல்வகுமார், ராஜகோபால், புஷ்பராஜ், கண்ணன், கிருஷ்ணவேணி, சிவாஜி லோகு, ராதாகிருஷ்ணன் மற்றும் சிவாஜியின் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...