தாராபுரத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நாளையுடன் நிறைவு

தாராபுரம் ரோட்டரி கிளப், தாராபுரம் ரோட்டரி அறக்கட்டளை, பாக்யா டி.வி, ஒமகோ ஈவென்ட்ஸ் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள ரோட்டரி மகாலில் தொடங்கியது.


திருப்பூர்: கண்காட்சியில் தள்ளுபடி விலையில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன.

தாராபுரம் ரோட்டரி கிளப், தாராபுரம் ரோட்டரி அறக்கட்டளை, பாக்யா டி.வி., ஒமகோ ஈவென்ட்ஸ் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி தாராபுரம் உடுமலை ரோட்டில் உள்ள ரோட்டரி மகாலில் தொடங்கியது. துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கிவைத்தார்.

விழாவில் மாவட்ட ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், அறக்கட்டளை தலைவர் லோகநாதன், ரோட்டரி சங்க தலைவர் சுப்ரமணியம், நிர்வாகத்தினர் குமாரசாமி, குப்பிராஜ், அழகுராஜா, சிவப்பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கண்காட்சியில் தள்ளுபடி விலையில் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. பல்வேறு விளையாட்டுகள் உள்ளன. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) நிறைவடைகிறது. கண்காட்சி ஏற்பாடுகளை ரோட்டரி செயலாளர் கதிரவன், திட்ட இயக்குனர் மைக்கேல், ஓமேகா ஈவென்ட்ஸ் வெங்கடேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...