பி.ஏ.பி பாசனத்தில் தண்ணீர் திருட்டு - பாசன வாய்க்காலை ஒட்டி உள்ள 12 மின் இணைப்பு துண்டிப்பு

பி.ஏ.பி பாசன வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகளின் குழுவினர் 12-மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில் மின்வாரியத்தினர், பொதுப்பணித்துறையினர், போலீசார்,வருவாய்துறையினர் இணைந்து விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள 12-மின் இணைப்பை துண்டித்தனர்.

பி.ஏ.பி நான்காம் மண்டலத்தில் தாராபுரத்தை அடுத்த பொட்டிக்கம்பாளையம், நாரணாபுரம் பொன்னாபுரம் பகுதிகள் பாசன வசதி பெறுகிறது. பி.ஏ.பி பாசனப்பகுதியில் மேல் ஆயக்கட்டு விவசாயிகள் தண்ணீர் சப்ளையின்போது ஒஸ் போட்டு தண்ணீர் திருடுவதால் கடைமடைக்கு தண்ணீர் போய் சேர்வதில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பாசன வாய்க்காலை ஒட்டி 50-மீட்டருக்குள் உள்ள மின் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் குழு ஏற்பாடு செய்தனர்.



தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில் மின்வாரியத்தினர், பொதுப்பணித்துறையினர், போலீசார், வருவாய்துறையினர் இணைந்து விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள 12-மின் இணைப்பை துண்டித்தனர்.



ஒவ்வொரு மின்இணைப்பை துண்டிக்கும் போதும் அந்த மின் இணைப்பு பெற்ற விவசாயின் குடும்பத்தினர் தடுத்தனர்.

அதிகாரிகள் விதிப்படி மின் இணைப்பை துண்டிக்கப்படுவதாக கூறி துண்டித்தனர்.

நாராணபுரம் பகுதியில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் மின் இணைப்பு துண்டிப்பு விஷயத்தில் சில விளக்கங்கள் தேவை என்று கூறியதையடுத்து மின்இணைப்பை துண்டிக்கும்பணி நிறுத்தப்பட்டது.16-தேதி விவசாயிகள்குழு தாராபுரம் கோட்டாட்சியர் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...