பி.ஏ.பி பாசனத்தில் தண்ணீர் திருட்டு - பாசன வாய்க்காலை ஒட்டி உள்ள 12 மின் இணைப்பு துண்டிப்பு

பி.ஏ.பி பாசன வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அதிகாரிகளின் குழுவினர் 12-மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.


திருப்பூர்: தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில் மின்வாரியத்தினர், பொதுப்பணித்துறையினர், போலீசார்,வருவாய்துறையினர் இணைந்து விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள 12-மின் இணைப்பை துண்டித்தனர்.

பி.ஏ.பி நான்காம் மண்டலத்தில் தாராபுரத்தை அடுத்த பொட்டிக்கம்பாளையம், நாரணாபுரம் பொன்னாபுரம் பகுதிகள் பாசன வசதி பெறுகிறது. பி.ஏ.பி பாசனப்பகுதியில் மேல் ஆயக்கட்டு விவசாயிகள் தண்ணீர் சப்ளையின்போது ஒஸ் போட்டு தண்ணீர் திருடுவதால் கடைமடைக்கு தண்ணீர் போய் சேர்வதில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பாசன வாய்க்காலை ஒட்டி 50-மீட்டருக்குள் உள்ள மின் இணைப்புகளை துண்டிக்க அதிகாரிகள் குழு ஏற்பாடு செய்தனர்.



தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில் மின்வாரியத்தினர், பொதுப்பணித்துறையினர், போலீசார், வருவாய்துறையினர் இணைந்து விவசாயிகளின் தோட்டத்தில் உள்ள 12-மின் இணைப்பை துண்டித்தனர்.



ஒவ்வொரு மின்இணைப்பை துண்டிக்கும் போதும் அந்த மின் இணைப்பு பெற்ற விவசாயின் குடும்பத்தினர் தடுத்தனர்.

அதிகாரிகள் விதிப்படி மின் இணைப்பை துண்டிக்கப்படுவதாக கூறி துண்டித்தனர்.

நாராணபுரம் பகுதியில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் மின் இணைப்பு துண்டிப்பு விஷயத்தில் சில விளக்கங்கள் தேவை என்று கூறியதையடுத்து மின்இணைப்பை துண்டிக்கும்பணி நிறுத்தப்பட்டது.16-தேதி விவசாயிகள்குழு தாராபுரம் கோட்டாட்சியர் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...