உடுமலை அமராவதி அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று உடுமலை அமராவதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள பொதுப்பணித்துறை கோரிக்கை.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு நெல் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருவதாக விவசாயிகள் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் இன்று முதல் 15 நாட்களுக்கு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆற்றுபகுதியிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாயில் தண்ணீரை திறந்து வைத்தார்.

இதன்மூலம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணிகடவு கிரி, மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி, எலையமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...