அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன் - கோவையில் திமுக எம்.பி.ஆ.ராசா ஆவேசம்

தற்போது நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன், சட்டரீதியாக எதிர்கொள்வேன் என நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.


கோவை: 53 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. 50 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது தமிழகம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கூறியுள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் திமுக பொறியாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.



இதில் திமுக எம்பி ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது மேடையில் பேசிய அவர்,

2023ல் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்துள்ளேன் என்கிறார் பிரதமர் மோடி.53 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய் சேர்த்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.50 ஆண்டுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது தமிழகம்.

தற்போது நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனைக்கு பதுங்க மாட்டேன் சட்டரீதியாக எதிர்கொள்வேன்.அமலாக்கத்துறை சோதனை சாதாரணமாக நடப்பது தான்.

கோவையில் நேற்று அமலாக்கத்துறை ஆ.ராசாவிற்கு சொந்தமான இடத்தில் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...