தாராபுரத்தில் வரும் 29ம் தேதி மனைவி நல வேட்பு விழா - முன்பதிவு செய்ய அழைப்பு

தாராபுரம் மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோவில் மன்ற அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டத்தில் வரும் 29ஆம் தேதி மனைவி நல வேட்பு விழா நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: மனைவி நல வேட்பு விழாவில் 100- க்கும் மேற்பட்ட தம்பதியினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கணவன், மனைவி இருவரும் தம்பதியராகக் கலந்துகொண்டு திருமண நாளை நினைவுப்படுத்தி பேசலாம் என தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோவில் மன்ற அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டம் அண்ணா நகரில் உள்ள மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளையின் இந்த வருடத்திற்கான முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அவ்விழாவில் பெண்களின் பெருமையாக மனைவி நல வேட்பு விழா நடத்தப்பட உள்ளது.



விழா வருகின்ற 29-ந்தேதி தாராபுரம்-உடுமலை ரோட்டில் உள்ள அரிமா அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவில் ஆழியார் உலக சமுதாய சேவா சங்கத்தின் விசன் இணை இயக்குனர் பேராசிரியர் அருட்செல்வி மனைவியின் மாண்பு பற்றியும், திருச்சி பேராசிரியர் நீலகண்டன் வாழ்வியலில் வேதாத்திரியம் என்கிற தலைப்பிலும் பேச உள்ளனர்.

மனைவி நல வேட்பு விழாவில் 100-க்கும் மேற்பட்ட தம்பதியினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கணவன், மனைவி இருவரும் தம்பதியராகக் கலந்துகொண்டு திருமண நாளை நினைவில் நிறுத்தி தியாகத்தின் திரு உருவமாம் மனைவியின் மாண்பைப் போற்றும் விழாவாக இந்த விழா அமைய உள்ளது. இதில் கலந்துகொண்டு பயன் பெற முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...