தாராபுரத்தில் வரும் 29ம் தேதி மனைவி நல வேட்பு விழா - முன்பதிவு செய்ய அழைப்பு

தாராபுரம் மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோவில் மன்ற அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டத்தில் வரும் 29ஆம் தேதி மனைவி நல வேட்பு விழா நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: மனைவி நல வேட்பு விழாவில் 100- க்கும் மேற்பட்ட தம்பதியினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கணவன், மனைவி இருவரும் தம்பதியராகக் கலந்துகொண்டு திருமண நாளை நினைவுப்படுத்தி பேசலாம் என தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மனவளக்கலை மன்ற அறிவுத் திருக்கோவில் மன்ற அறக்கட்டளையின் அறங்காவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டம் அண்ணா நகரில் உள்ள மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளையின் இந்த வருடத்திற்கான முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. அவ்விழாவில் பெண்களின் பெருமையாக மனைவி நல வேட்பு விழா நடத்தப்பட உள்ளது.



விழா வருகின்ற 29-ந்தேதி தாராபுரம்-உடுமலை ரோட்டில் உள்ள அரிமா அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவில் ஆழியார் உலக சமுதாய சேவா சங்கத்தின் விசன் இணை இயக்குனர் பேராசிரியர் அருட்செல்வி மனைவியின் மாண்பு பற்றியும், திருச்சி பேராசிரியர் நீலகண்டன் வாழ்வியலில் வேதாத்திரியம் என்கிற தலைப்பிலும் பேச உள்ளனர்.

மனைவி நல வேட்பு விழாவில் 100-க்கும் மேற்பட்ட தம்பதியினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் கணவன், மனைவி இருவரும் தம்பதியராகக் கலந்துகொண்டு திருமண நாளை நினைவில் நிறுத்தி தியாகத்தின் திரு உருவமாம் மனைவியின் மாண்பைப் போற்றும் விழாவாக இந்த விழா அமைய உள்ளது. இதில் கலந்துகொண்டு பயன் பெற முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Newsletter

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...