வரும் 16-ம் தேதி சென்னையில் உண்ணாநிலை - திருப்பூர் மாவட்ட கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம் முடிவு

மின் கட்டண உயர்வுக்கு எதிராக வரும் 16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட திருப்பூர் மாவட்ட கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.


திருப்பூர்: தமிழக அரசு 3பி கட்டணத்தை 3 ஏ முறைக்கு மாற்றி அமைத்திருப்பதை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள தொழில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஒன்றினைந்து மின்துகர்வோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பு சார்பில் 430 சதவீதம் உயர்த்திய நிலைக்கட்டணம், பரபரப்பு நேர (பீக் ஹவர்) கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். ‘3பி’யில் இருந்து ‘3ஏ1’ நடைமுறைக்கு மாற்றி சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சோலார் மேற்கூரை நெட் வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.



இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கிரில் ஒர்க்க்ஷாப் உரிமையாளர்கள் நலசங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் திருப்பூரில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாவட்ட தலைவராக தாமஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார், பொருளாளராக பாலமுருகன் மற்றும் துணை செயலாளர் பார்த்திபன், ஹரிகரன் மகுடீஸ்வரன், உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

இதில் மாவட்டம் முழுவதிலிமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர் :

இதில் குரிப்பாக மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 16-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்திருக்கிறார்கள். அந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளித்து அனைத்து கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்களும் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு 3பி கட்டணத்தை 3 ஏ முறைக்கு மாற்றி அமைத்திருப்பதாக அறிவித்திருந்தாலும் அது ஒர்க்ஷாப் தொழிலுக்கு பொருந்தாது எனவே தமிழக அரசு அதை மறுபரிசீலினை செய்ய வேண்டும்.

கடந்த காலங்களில் வெல்டிங் செய்ய அதிக திறன் கொண்ட ட்ரான்ஸ்பார்மர்கள் பயண்படுத்தி வந்தநிலை மாறி நவீன காலநிலைக்கு ஏற்ப குறைந்த மின் செலவில் வெல்டிங் செய்யும் தொழில் நுட்பங்கள் வந்து விட்டது எனவே பீக்ஹவர் என கூறப்படும் காலை, மாலை 6 முதல் 10 மணிவரையிலான நேரங்களிலும் வெல்டிங் செய்ய அனுமதி அளிக்கவேண்டும், சிறு பழுது பார்ப்பு பணிகளுக்காக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று பணிசெய்வதற்கு முன்அனுமதி பெற வேண்டும் என்ற மின்வாரியத்தின் கெடுபிடியை ரத்துசெய்யவேண்டும் என்பன உள்ளிடட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதாக அச்சங்கத்தின் மாவட்ட நிர்வாகி செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...