ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் அமைப்பு - மக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் திறப்பு

கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.


கோவை: ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் ரூ.25 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் திறந்து வைத்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதியின் மூலம் ரூ.25 இலட்சம் மதிப்பில் தடையில்லா மின்சார வசதி, நிலத்தடி நீர் வசதி, ஆரம்ப சுகாதார நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட சுகாதாரத்திற்காக அரை ஏக்கர் பரப்பளவிற்கு சுற்றுச்சுவர் ஆகிய வசதிகள் நிறுவப்பட்டுள்ளதை தொடர்ந்து, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) அருணா, மெஸ்ஸூரி கட்டிங் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மணி நாராயணன், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...