தென்னை விவசாயிகளிடம் இருந்து மீண்டும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும்

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து மட்டும் கொப்பரை கொள்முதல் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2023 ஆம் ஆண்டிற்கு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த இலக்கான 22000 மெ.டன் பூர்த்தி அடைந்த நிலையில் தற்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் அரசால் கொப்பரை கொள்முதல் இலக்கு அதிகரித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி (1500 மெ.டன்) ஆனைமனை (1200 மெ.டன்), செஞ்சேரி மலையடிப்பாளையம்) (1000 மெ.டன்), காரமடை (1000 மெ.டன்), சூலூர் (1000 மெ.டன்), கிணத்துக்கடவு (900 மெ.டன்) அன்னூர் (800 மெ.டன்), நெகமம் (800 மெ.டன்), தொண்டாமுத்தூர் (700 மெ.டன்) மற்றும் கோயம்புத்தூர் (500 மெ.டன்) ஆகிய 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கூடுதலாக 9400 மெ.டன் அரவை கொப்பரை கிலோ ரூ.108.60. க்கும் மற்றும் 400 மெ.டன் பந்து கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் 25.11.2023 வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

மத்திய அரசு கடிதத்தின்படி ஏற்கனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து மட்டும் கொப்பரை கொள்முதல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏற்கனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துள்ள கோயம்புத்தூர் மாவட்ட தென்னை விவசாயிகள் இக்கால நீட்டிப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...