தென்னை விவசாயிகளிடம் இருந்து மீண்டும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும்

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து மட்டும் கொப்பரை கொள்முதல் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2023 ஆம் ஆண்டிற்கு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த இலக்கான 22000 மெ.டன் பூர்த்தி அடைந்த நிலையில் தற்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் அரசால் கொப்பரை கொள்முதல் இலக்கு அதிகரித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி (1500 மெ.டன்) ஆனைமனை (1200 மெ.டன்), செஞ்சேரி மலையடிப்பாளையம்) (1000 மெ.டன்), காரமடை (1000 மெ.டன்), சூலூர் (1000 மெ.டன்), கிணத்துக்கடவு (900 மெ.டன்) அன்னூர் (800 மெ.டன்), நெகமம் (800 மெ.டன்), தொண்டாமுத்தூர் (700 மெ.டன்) மற்றும் கோயம்புத்தூர் (500 மெ.டன்) ஆகிய 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கூடுதலாக 9400 மெ.டன் அரவை கொப்பரை கிலோ ரூ.108.60. க்கும் மற்றும் 400 மெ.டன் பந்து கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் 25.11.2023 வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

மத்திய அரசு கடிதத்தின்படி ஏற்கனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து மட்டும் கொப்பரை கொள்முதல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏற்கனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துள்ள கோயம்புத்தூர் மாவட்ட தென்னை விவசாயிகள் இக்கால நீட்டிப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...