வால்பாறை அருகே எஸ்டேட் பகுதியில் கரடி நடமாட்டம் - தொழிலாளர்கள் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுற்றிவரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.


கோவை: கரடி சுற்றும் பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, பொதுவாக காட்டுயானைகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு எருமைகள் போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது.இதில் மனித விலங்கு மோதல் எதிர் பாராத விதத்தில் நடக்கிறது.



இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளி இரண்டு பெண்களை கரடி தாக்கியதில் இருவரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குரங்கு முடி,முருகன் எஸ்டேட் மாணிக்கா எஸ்டேட், போன்ற எஸ்டேட் பகுதியில் கரடி சுற்றி வருவதாக தேயிலை தோட்ட தொழிலாளிகள் வேலை செய்யும் பொழுது தேயிலை தோட்டத்தில் வந்ததாக மக்கள் அச்சம் அடைந்து.



வனத்துறையினருக்கு தெரிவித்தனர் வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து மாணிக்கா எஸ்டேட் பகுதியில் கரடியை பிடிக்க கூண்டு வைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். அப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் மானாம்பள்ளி வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....