வால்பாறை அருகே எஸ்டேட் பகுதியில் கரடி நடமாட்டம் - தொழிலாளர்கள் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுற்றிவரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.


கோவை: கரடி சுற்றும் பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, பொதுவாக காட்டுயானைகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு எருமைகள் போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது.இதில் மனித விலங்கு மோதல் எதிர் பாராத விதத்தில் நடக்கிறது.



இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளி இரண்டு பெண்களை கரடி தாக்கியதில் இருவரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குரங்கு முடி,முருகன் எஸ்டேட் மாணிக்கா எஸ்டேட், போன்ற எஸ்டேட் பகுதியில் கரடி சுற்றி வருவதாக தேயிலை தோட்ட தொழிலாளிகள் வேலை செய்யும் பொழுது தேயிலை தோட்டத்தில் வந்ததாக மக்கள் அச்சம் அடைந்து.



வனத்துறையினருக்கு தெரிவித்தனர் வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து மாணிக்கா எஸ்டேட் பகுதியில் கரடியை பிடிக்க கூண்டு வைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். அப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் மானாம்பள்ளி வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...