நாட்டை காப்போம் கூட்டமைப்பு சார்பில் தாராபுரத்தில் சட்ட விழிப்புணர்வு மாநாடு கலைக்குழு பிரச்சாரம்

தாராபுரம் அண்ணா சிலை அருகே நாட்டை காப்போம் புதுமை சமூகங்கள் முன்னெடுக்கும் இந்திய அரசமைப்பு சட்ட பாதுகாப்பு பரப்புரை கலைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: இந்திய அரசமைப்பு சட்ட பாதுகாப்பு பரப்புரை கலைப்பயண நிகழ்ச்சியில், நாட்டுப்புற கலைஞர்களின் கலை மாமணி விருது பெற்ற கலாராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாட்டை காப்போம் கூட்டமைப்பு நடத்தும் இந்திய அரசமைப்பு சட்ட விழிப்புணர்வு மாநாடு வருகின்ற 17ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.



இதனுடைய வரவேற்பு நிகழ்ச்சி மதுரை தமிழ் மலர் கலைக்குழுவினர் சார்பில் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அண்ணா சிலை அருகே நாட்டை காப்போம் புதுமை சமூகங்கள் முன்னெடுக்கும் இந்திய அரசமைப்பு சட்ட பாதுகாப்பு பரப்புரை கலைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளராக பிரான்சிஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.



இந்நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை மாமணி விருது பெற்ற கலாராணி, கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கனகராஜ் பொன்னுச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து முருகானந்தம், வழக்கறிஞர் சக்திவேல் மற்றும் முனீஸ்வரன், சண்முகம், ராசாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...