நாட்டை காப்போம் கூட்டமைப்பு சார்பில் தாராபுரத்தில் சட்ட விழிப்புணர்வு மாநாடு கலைக்குழு பிரச்சாரம்

தாராபுரம் அண்ணா சிலை அருகே நாட்டை காப்போம் புதுமை சமூகங்கள் முன்னெடுக்கும் இந்திய அரசமைப்பு சட்ட பாதுகாப்பு பரப்புரை கலைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: இந்திய அரசமைப்பு சட்ட பாதுகாப்பு பரப்புரை கலைப்பயண நிகழ்ச்சியில், நாட்டுப்புற கலைஞர்களின் கலை மாமணி விருது பெற்ற கலாராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாட்டை காப்போம் கூட்டமைப்பு நடத்தும் இந்திய அரசமைப்பு சட்ட விழிப்புணர்வு மாநாடு வருகின்ற 17ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.



இதனுடைய வரவேற்பு நிகழ்ச்சி மதுரை தமிழ் மலர் கலைக்குழுவினர் சார்பில் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அண்ணா சிலை அருகே நாட்டை காப்போம் புதுமை சமூகங்கள் முன்னெடுக்கும் இந்திய அரசமைப்பு சட்ட பாதுகாப்பு பரப்புரை கலைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளராக பிரான்சிஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.



இந்நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை மாமணி விருது பெற்ற கலாராணி, கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கனகராஜ் பொன்னுச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து முருகானந்தம், வழக்கறிஞர் சக்திவேல் மற்றும் முனீஸ்வரன், சண்முகம், ராசாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...