உடுமலையில் வானவியல் சார் பயிற்சி பட்டறை - சூரிய குடும்பம் பற்றி மாணவர்களுக்கு விளக்கம்

உடுமலையில் நடைபெற்ற வானவியல் சார் பயிற்சி பட்டறையில், சூரிய குடும்பம், கோள்கள், சூரியனை சுற்றி வரும் விதம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.


திருப்பூர்: வானவியல் சார் பயிற்சி பட்டறையில். சர்வதேச விண்வெளி வார விழா பற்றியும், வன உயிரின வார விழா பற்றியும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.

உடுமலை கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் ,உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் சார்பில் சர்வதேச விண்வெளி வார விழா அக்டோபர் 4 முதல் 10 வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் அக்டோபர் 7 அன்று அந்தியூர் கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான வானவியல் சார் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் சூரிய குடும்பம், கோள்கள், சூரியனை சுற்றி வரும் விதம், நிலவின் முகங்கள், நட்சத்திர தொகுதிகளை எளிதில் அடையாளம் காணுதல், சூரிய கடிகாரம், பந்து கண்ணாடி மாயக்கண்ணாடி, ஓரிடத்தில் உள்ளூர் நண்பகல் நேரத்தை கணக்கிடுதல், சரியான திசைகளை சூரியனின் நிழலை வைத்து கணக்கிடுதல் என்பது போன்ற பல்வேறு வானவியல் சார் கருத்துக்களை எளிமையாக தெரிந்து கொள்வதற்கான எளிய பொருட்களைக் கொண்டு அறிவியல் சார் கருவிகளை மாணவர்கள் தாங்களாகவே செய்ய வழி காட்டப்பட்டது.



அது சார்ந்த வானவியல் சார் கருத்துக்களை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், ஜிவிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியும் கருத்தாளருமான ஹரிணி ஆகியோர் விளக்கிக் கூறினர். கமலம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை வகித்தார். உடுமலை உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் மணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சர்வதேச விண்வெளி வார விழா பற்றியும், வன உயிரின வார விழா பற்றியும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் எடுத்துக் கூறினார்.

குறிப்பாக ஆனைமலை புலிகள் காப்பகத்தை பாதுகாக்க வேண்டியது நமது முக்கிய கடமை என்பதையும் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறினார். நிறைவாக கல்லூரி அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கீதாமணி நன்றி கூறினார்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...