உடுமலையில் மாற்றுத்திறனாளி பணி நீக்கம் - பாதிக்கப்பட்டவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

உடுமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிவராஜ் என்பவர், சுகாதார துறையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றிய தன்னை பணி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


கோவை: தன்னை பணி நீக்கம் செய்திருப்பது செல்லாது எனவும், எனவே தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் மனு அளித்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சிவராஜ். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதல், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சுகாதார துறையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வரும் தன்னை சமீபத்தில் பணி நீக்கம் செய்துள்ளனர்.

தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிய தன்னை பணிநீக்கம் செய்திருப்பது செல்லாது எனவும், ஏற்கனவே தனது பணி தொடர்பாக வழக்கு தொடர்ந்து அதற்கான நீதிமன்ற தடையாணை இருக்கும் நிலையில், தற்சமயம் தன்னை பணி நீக்கம் செய்திருப்பது செல்லாது எனவும், எனவே தனது பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...