தாராபுரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை பணி - நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் தொடங்கி வைப்பு

தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் நகரப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார்.


கோவை: நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பொது நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் சிரமமின்றி பயணிக்க முடியும் என நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் நகரப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது,

தாராபுரம் நகராட்சி 4-வது வார்டு பகுதியில் பல ஆண்டு காலமாக மக்கள் சாலை வசதி இல்லாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி பொது நிதி ரூ.12 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் மக்கள் சிரமமின்றி பயணிக்க முடியும் என அவர் கூறினார்.

அப்போது நகர்மன்ற உறுப்பினர் ராஜாத்தி பாண்டியன், 4-வது வார்டு செயலாளர் ரவிச்சந்திரன், வார்டு அவைத்தலைவர் சென்னியப்பன், வார்டு பிரதிநிதிகள் ஆறுச்சாமி, மகாலட்சுமிரத்தினம், வாக்குச்சாவடி முகவர் குணசேகரன், பெரியசாமி, பாலகிருஷ்ணன், முனியப்பன், ஆறுமுகம் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...