கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை திறப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்துார் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலுாட்டும் அறையை மேயர் கல்பனா நேற்று திறந்து வைத்தார். கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் செல்வசுரபி, 'லேடீஸ் சர்க்கிள் 11' நிர்வாக தலைவர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தாய்மார்கள் பாலுாட்டும் அறை நேற்று திறந்து வைக்கப்பட்டது. மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரியினங்கள் செலுத்துதல் என பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

ஆனால், பாலுாட்டும் அறை இல்லாததால் தாய்மார்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகிவந்தனர். இந்த அலுவலக வளாகத்தில் கடந்த மாதம் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் முகாம் நடந்தது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து சென்ற நிலையில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலுாட்ட முடியாமல் சிரமப்பட்டதை அறிந்து, மேடைக்கு பின்புறம் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிலையில், அலுவலக வளாகத்தில் இருக்கும் பொது மக்கள் காத்திருப்பு அறையில், கோயம்புத்துார் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலுாட்டும் அறையை மேயர் கல்பனா நேற்று திறந்து வைத்தார். கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் செல்வசுரபி, 'லேடீஸ் சர்க்கிள் 11' நிர்வாக தலைவர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...