கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை திறப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்புத்தூர் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறை திறக்கப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்துார் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலுாட்டும் அறையை மேயர் கல்பனா நேற்று திறந்து வைத்தார். கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் செல்வசுரபி, 'லேடீஸ் சர்க்கிள் 11' நிர்வாக தலைவர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் தாய்மார்கள் பாலுாட்டும் அறை நேற்று திறந்து வைக்கப்பட்டது. மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரியினங்கள் செலுத்துதல் என பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

ஆனால், பாலுாட்டும் அறை இல்லாததால் தாய்மார்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகிவந்தனர். இந்த அலுவலக வளாகத்தில் கடந்த மாதம் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் முகாம் நடந்தது. தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து சென்ற நிலையில் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலுாட்ட முடியாமல் சிரமப்பட்டதை அறிந்து, மேடைக்கு பின்புறம் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்நிலையில், அலுவலக வளாகத்தில் இருக்கும் பொது மக்கள் காத்திருப்பு அறையில், கோயம்புத்துார் வடக்கு லேடீஸ் சர்க்கிள் 11 சார்பில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலுாட்டும் அறையை மேயர் கல்பனா நேற்று திறந்து வைத்தார். கமிஷனர் பிரதாப், துணை கமிஷனர் செல்வசுரபி, 'லேடீஸ் சர்க்கிள் 11' நிர்வாக தலைவர் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...