வால்பாறை அருகே கரடி தாக்கி 2 வட மாநில பெண்கள் படுகாயம் - மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கரடி தாக்கியதில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு வட மாநில பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.


கோவை: தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்க எஸ்டேட் பகுதியில் 38 வது தேயிலை தோட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். சுமார் 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு கரடிகள் தேயிலை தோட்டத்திற்குள் ஓடின.

அப்போது தேயிலைக்கு உரம் போட்டு கொண்டிருந்த சுமதி வயது 25 மற்றும் ஹித்தினி குமாரி வயது 26 ஆகிய இரண்டு பெண்களை கால் மற்றும் தலைப்பகுதியில் கரடி தாக்கியது. இதனைப்பார்த்த அருகில் உள்ளவர்கள் சத்தம் போட்டு விரட்டியதில் கரடி மீண்டும் வன பகுதிக்குள் ஓடி ஒளிந்துக்கொண்டது.

ரத்த வெள்ளத்தில் இருந்த இரண்டு பெண்களையும் அருகில் இருந்தவர்கள் தனியார் வாகனத்தின் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



இதில் ஒரு பெண்ணுக்கு தலையிலும், மற்றொரு பெண்ணுக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.



மேலும் மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் தலைமையில் மேல் சிகிச்சைக்காக ஒருவருக்கு 10 ஆயிரம் வீதம் இருவருக்கு 20 ஆயிரம் வழங்கினார். தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...