வால்பாறை அருகே கரடி தாக்கி 2 வட மாநில பெண்கள் படுகாயம் - மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கரடி தாக்கியதில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு வட மாநில பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.


கோவை: தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்க எஸ்டேட் பகுதியில் 38 வது தேயிலை தோட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். சுமார் 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு கரடிகள் தேயிலை தோட்டத்திற்குள் ஓடின.

அப்போது தேயிலைக்கு உரம் போட்டு கொண்டிருந்த சுமதி வயது 25 மற்றும் ஹித்தினி குமாரி வயது 26 ஆகிய இரண்டு பெண்களை கால் மற்றும் தலைப்பகுதியில் கரடி தாக்கியது. இதனைப்பார்த்த அருகில் உள்ளவர்கள் சத்தம் போட்டு விரட்டியதில் கரடி மீண்டும் வன பகுதிக்குள் ஓடி ஒளிந்துக்கொண்டது.

ரத்த வெள்ளத்தில் இருந்த இரண்டு பெண்களையும் அருகில் இருந்தவர்கள் தனியார் வாகனத்தின் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



இதில் ஒரு பெண்ணுக்கு தலையிலும், மற்றொரு பெண்ணுக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.



மேலும் மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் தலைமையில் மேல் சிகிச்சைக்காக ஒருவருக்கு 10 ஆயிரம் வீதம் இருவருக்கு 20 ஆயிரம் வழங்கினார். தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...