வால்பாறை அருகே கரடி தாக்கி 2 வட மாநில பெண்கள் படுகாயம் - மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அருகே கரடி தாக்கியதில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு வட மாநில பெண் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.


கோவை: தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்க எஸ்டேட் பகுதியில் 38 வது தேயிலை தோட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். சுமார் 11 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு கரடிகள் தேயிலை தோட்டத்திற்குள் ஓடின.

அப்போது தேயிலைக்கு உரம் போட்டு கொண்டிருந்த சுமதி வயது 25 மற்றும் ஹித்தினி குமாரி வயது 26 ஆகிய இரண்டு பெண்களை கால் மற்றும் தலைப்பகுதியில் கரடி தாக்கியது. இதனைப்பார்த்த அருகில் உள்ளவர்கள் சத்தம் போட்டு விரட்டியதில் கரடி மீண்டும் வன பகுதிக்குள் ஓடி ஒளிந்துக்கொண்டது.

ரத்த வெள்ளத்தில் இருந்த இரண்டு பெண்களையும் அருகில் இருந்தவர்கள் தனியார் வாகனத்தின் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



இதில் ஒரு பெண்ணுக்கு தலையிலும், மற்றொரு பெண்ணுக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.



மேலும் மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் தலைமையில் மேல் சிகிச்சைக்காக ஒருவருக்கு 10 ஆயிரம் வீதம் இருவருக்கு 20 ஆயிரம் வழங்கினார். தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் கரடியை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...