வால்பாறையில் கோவில் கட்டிடங்கள், கொய்யா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் - மக்கள் அச்சம்

வால்பாறை அருகே புது தோட்டம் எஸ்டேட்டில் உள்ள 10 ஏக்கரா பகுதியில் பட்டப்பகலில் இரண்டு காட்டு யானைகள் புகுந்து தோட்டத்தில் இருந்த கொய்யா மரங்களை சேதப்படுத்திவிட்டு அருகில் இருந்த முனீஸ்வரன் கோவில் கட்டிடங்களை இடித்து தள்ளி அட்டகாசத்தில் ஈடுபட்டது.


கோவை: குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் வராதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் அவற்றை விரட்ட வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் வனத்துறையினரை கேட்டுக்கொண்டனர்.



வால்பாறை அருகே முனீஸ்வரன் கோவில் கட்டிடங்களையும் குடியிருப்பு அருகில் உள்ள கொய்யா மரங்களையும் காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தயது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீட்டில் வளர்க்கும் தோட்டங்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது.

இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் வால்பாறை அருகே புது தோட்டம் எஸ்டேட் பகுதியில் 10 ஏக்கரா பகுதியில் இரண்டு காட்டு யானைகள் பட்டப்பகலில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு அருகில் உள்ள தோட்டத்தில் கொய்யா மரத்தை உடைத்து பழங்களை சாப்பிட்டு கொய்யா மரத்தை வேரோடு தள்ளியது.



அதேபோல் அப்பகுதியில் இருக்கும் முனீஸ்வரன் கோவில் வளாகத்தில் நுழைந்து சுவர் மற்றும் செட் ஆகியவைகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளை அப்பகுதியில் இருந்து வன பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...