சூலூர் அருகே பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்த கார் - சிக்கித் தவித்தவரை பத்திரமாக போலீசார் மீட்டனர்

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சூலூர் அருகே பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார், காருக்குள் இருந்த சதீஷை பத்திரமாக மீட்டனர்.


கோவை: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டை தேவனூர்புதூரைச் சேர்ந்தவர் விவசாயி சதீஷ். இவர் நேற்று மாலை சுல்தான்பேட்டை செஞ்சேரிமலை பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் பாய்ந்தது.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார் கதவை திறந்து வாய்கால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்த சதீஸை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவி அளித்தனர்.



இதனை தொடர்ந்து போலீசார் சூலூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் கிரேன் மூலம் வாய்காலில் பாய்ந்து விழுந்து கவிழ்ந்த காரை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.



இச்சம்பவம் சுல்தான்பேட்டை பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...