சூலூர் அருகே பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்த கார் - சிக்கித் தவித்தவரை பத்திரமாக போலீசார் மீட்டனர்

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சூலூர் அருகே பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார், காருக்குள் இருந்த சதீஷை பத்திரமாக மீட்டனர்.


கோவை: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டை தேவனூர்புதூரைச் சேர்ந்தவர் விவசாயி சதீஷ். இவர் நேற்று மாலை சுல்தான்பேட்டை செஞ்சேரிமலை பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் பாய்ந்தது.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார் கதவை திறந்து வாய்கால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்த சதீஸை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவி அளித்தனர்.



இதனை தொடர்ந்து போலீசார் சூலூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் கிரேன் மூலம் வாய்காலில் பாய்ந்து விழுந்து கவிழ்ந்த காரை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.



இச்சம்பவம் சுல்தான்பேட்டை பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...