சூலூர் அருகே பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்த கார் - சிக்கித் தவித்தவரை பத்திரமாக போலீசார் மீட்டனர்

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சூலூர் அருகே பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்தது. தகவல் அறிந்து சென்ற போலீசார், காருக்குள் இருந்த சதீஷை பத்திரமாக மீட்டனர்.


கோவை: ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பி.ஏ.பி. வாய்காலுக்குள் பாய்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலைப்பேட்டை தேவனூர்புதூரைச் சேர்ந்தவர் விவசாயி சதீஷ். இவர் நேற்று மாலை சுல்தான்பேட்டை செஞ்சேரிமலை பகுதியில் உள்ள பி.ஏ.பி. வாய்க்கால் வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் பாய்ந்தது.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார் கதவை திறந்து வாய்கால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்த சதீஸை பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவி அளித்தனர்.



இதனை தொடர்ந்து போலீசார் சூலூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் கிரேன் மூலம் வாய்காலில் பாய்ந்து விழுந்து கவிழ்ந்த காரை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.



இச்சம்பவம் சுல்தான்பேட்டை பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...