கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர்களின் 41 மாத பணி காலத்தை ஓய்வூதியத்துக்கு பொருந்தக்கூடிய வகையில் முறைப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தில் சாலை பணியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: சாலை பணியாளர்கள் அனைவருக்கும் தர ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும் என்று சாலை பணியாளர்கள் கேட்டுகொண்டனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ரத்த கையெழுத்திட்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டத்தலைவர் ஜே.பீட்டர் தலைமை தாங்கினார்.

அப்போது தாராபுரம் கோட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி காலத்தை ஓய்வூதியத்துக்கு பொருந்தக்கூடிய வகையில் முறைப்படுத்த வேண்டும், சாலை பணியாளர்கள் அனைவருக்கும் தர ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பிறகு ரத்த கையெழுத்திட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோட்டச்செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்ட கிளை பொருளாளர் பாலா ராஜசேகர், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலச்செயலாளர் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ரத்த கையெழுத்து படிவங்களை வருகிற 13-ந்தேதி சென்னையில் முதல்-அமைச்சர் இல்ல அலுவலகத்தில் சாலை பணியாளர்கள் அனைவரும் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்தி வழங்குவது என்றும், அதில் அனைவரும் கலந்து கொள்வதெனவும் முடிவு எடுக்கப்பட்டது. முடிவில் சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...