உடுமலை ராணுவ பள்ளியில் தூய்மை பணிகள் - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் தூய்மை பாரத திட்டத்தின் நடைபெற்ற தூய்மை பணிகளில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை பேட்டையில் உள்ள ராணுவ பள்ளியில் தூய்மை பணிகள் தூரிதமாக நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் உள்ள சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டும் தூய்மை இந்தியா பணி பாரத திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்றது.



இப்பணியில் அமராவதி பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், இதர பணியாளர்கள், ஆண்டிய கவுண்டனுர் ஊராட்சி நிர்வாகம் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அமராவதி வனச்சரக பணியாளர்கள் அனைவரும் இணைந்து அமராவதி நகர் மற்றும் அமராவதி அணை சுற்றி உள்ள இடங்களை தூய்மை செய்தனர்.



இந்நிகழ்வில் அமராவதி நகர் சைனிக் பள்ளியின் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னெல் தீபு, பள்ளியின் துணை முதல்வர் விங் கமாண்டர் தீப்தி உபாத்யாயா, அமராவதி வனச்சரகர் சுரேஷ், ஆண்டிய கவுண்டனுர் பஞ்சாயத்து தலைவர் ரா மோகனவல்லி, துணைத்தலைவர் விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் தொடர் நிகழ்வாக கடந்த பத்து நாட்கள் தூய்மையை வலியுறுத்தும் பல்வேறு நிகழ்வுகள் சைனிக் பள்ளி மாணவர்களால் நடத்த பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...