உடுமலை ராணுவ பள்ளியில் தூய்மை பணிகள் - ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை அமராவதி நகர் ராணுவ பயிற்சி பள்ளியில் தூய்மை பாரத திட்டத்தின் நடைபெற்ற தூய்மை பணிகளில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: உடுமலை பேட்டையில் உள்ள ராணுவ பள்ளியில் தூய்மை பணிகள் தூரிதமாக நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகரில் உள்ள சைனிக் ராணுவ பயிற்சி பள்ளியில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டும் தூய்மை இந்தியா பணி பாரத திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்றது.



இப்பணியில் அமராவதி பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், இதர பணியாளர்கள், ஆண்டிய கவுண்டனுர் ஊராட்சி நிர்வாகம் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் அமராவதி வனச்சரக பணியாளர்கள் அனைவரும் இணைந்து அமராவதி நகர் மற்றும் அமராவதி அணை சுற்றி உள்ள இடங்களை தூய்மை செய்தனர்.



இந்நிகழ்வில் அமராவதி நகர் சைனிக் பள்ளியின் நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னெல் தீபு, பள்ளியின் துணை முதல்வர் விங் கமாண்டர் தீப்தி உபாத்யாயா, அமராவதி வனச்சரகர் சுரேஷ், ஆண்டிய கவுண்டனுர் பஞ்சாயத்து தலைவர் ரா மோகனவல்லி, துணைத்தலைவர் விஜயகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் தொடர் நிகழ்வாக கடந்த பத்து நாட்கள் தூய்மையை வலியுறுத்தும் பல்வேறு நிகழ்வுகள் சைனிக் பள்ளி மாணவர்களால் நடத்த பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...