உடுமலை அருகே இலவச மருத்துவ முகாம் - ஏராளமானோர் பங்கேற்பு

உடுமலை அருகே முக்கோணம் ஊராட்சியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் பலர் பங்கேற்று பயன் பெற்றனர்.


திருப்பூர்: உடுமலை அருகே நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள முக்கோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.



உடுமலை சுற்றுச்சூழல் சங்க தலைவர் கு.சி மணி தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செ சரவணன் வரவேற்புரை வழங்கினார்.

பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் இளங்கோவன் வெற்றியின் முதல் படி என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளர் ப கணபதி நாளைய பாரதம் நமதே என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

பிரியா நர்சிங் முதல்வர் எம் தவசு மணி தலைமையில் 12 பேர் கொண்ட குழு சர்க்கரை நோய் வியாதி கண்டறிதல், ரத்த பரிசோதனை, ரத்த வகை கண்டறிதல், ரத்த அழுத்தம் கண்டறிதல் முதலான பல்வேறு பரிசோதனைகளை முக்கோணம் பொதுமக்களுக்கு செய்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்படுத்தி முகாமை பயன்படுத்தி கொண்டனர். நர்சிங் கல்லூரி துணை முதல்வர் மேனகா, இயற்கை உணவுகளும், இனிய வாழ்வும் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நோய் நொடிகள் அன்டாதவாறு நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் அவர் விளக்கி கூறினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...