வால்பாறையில் தொடர் மழை - இரண்டு வீடுகள் இடிந்து சேதம்

வால்பாறையில் பெய்த தொடர் மழை காரணமாக 2 வீடுகளின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்ட வசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.


கோவை: கோவை வால் பாறையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து இரண்டு வார காலமாக தொடர்ந்து சாரல் மழையும் கன மழையும் பெய்து வருகிறது .

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சிறு சிறு நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக படிக்கட்டுகள் தடுப்பு சுவர்கள் சேதமடைகின்றன.

இந்நிலையில் வால்பாறை நகரை ஒட்டி உள்ள அண்ணா நகர் பகுதியில் அமுதா என்பவரின் வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்து பக்கத்தில் உள்ள ஆறுமுகம் என்பவரின் வீடும் சேதமடைந்தது.



இதனால் இரண்டு வீட்டின் மேல் கூரை சேதம் அடைந்தது வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தவித சேதம் இன்றி தப்பினர்.



தகவல் அறிந்த வால்பாறை நகரமன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன் நகர கழக செயலாளர் சுதாகரன் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிது பாதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...