தாராபுரத்தில் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடங்கள் - காணொளியில் திறந்து வைத்த முதலமைச்சர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குமாரபாளையத்தில் 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் அருகே அரசு அரசு பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை குழந்தை பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாராபுரம் அருகே உள்ள டி.குமாரபாளையத்தில் 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.



தாராபுரம் ஒன்றிய குழு தலைவரும் தாராபுரம் ஒன்றிய செயலாளருமான எஸ்.வி செந்தில் குமார் குத்துவிளக்கேற்றி கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிடம் ஒப்படைத்தார்.



பின்னர்பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன், பொறியாளர் காந்திமதி, குளத்துப்பாளையம் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி துணை தலைவர் துரைச்சாமி, பேரூராட்சி தலைவர் சுதாகர் கருப்புசாமி, ஒன்றிய குழு துணை தலைவர் சசிகுமார், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...