ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என கோவையில் தமிழக முதலமைச்சர் பேட்டி

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை வேட்பாளராக அறிவித்து இருப்பதன் மூலம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் தெரிவித்தார்.

சேலத்தில் நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் இன்று விமானம் மூலம் சென்னை செல்கின்றார். அதற்காக கோவை விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் வரவேற்பளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பதால், 100 சதவிகித வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தெரிவித்தார்.

இந்த முடிவு கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தாதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அதிருப்தி என யாருமே சொல்லவில்லை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...