பட்டா பூமியாக மாறிய மயானம் - மாற்று இடம் வழங்குமாறு கோவை ஆட்சியரிடம் ஆதிதிராவிடர் மக்கள் மனு

மதுக்கரை தாலுக்கா அரிசிபாளையம் ஆதிதிராவிடர் காலனி மக்கள் தங்களுக்கு மயானம் ஏற்பாடு செய்து தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் அரிசிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.



இந்த நிலையில் ஊருக்கு தென்புறமாக மயானம் அமைந்துள்ள நிலையில், அருகில் உள்ள நில உரிமையாளர் தனியார் நிறுவன ரியல் எஸ்டேட்டுக்கு அவரது நிலத்தை விற்பனை செய்து விட்டார். அந்த நிலம் வாங்கியவர்கள் மயானத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பியுள்ள நிலையில், இது சம்பந்தமாக நாங்கள் தாசில்தாரிடம் மனு கொடுத்ததால் நேரடியாக வந்த அவர் இது பட்டா பூமி என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஊரில் ஏதாவது இறப்பு ஏற்பட்டால் புதைக்க இடம் இல்லை என்பதால் எங்களுக்கு ஏதாவது ஒரு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என காலனி மக்கள் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...