நிறுவப்படாத அம்பேத்கர் சிலை - கோவை ஆட்சியரிடம் ஒற்றுமை மேடை சார்பில் மனு

மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 16 ஆண்டுகள் ஆகியும் அம்பேத்கர் சிலை நிறுவப்படாத நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி பொதுக் கூட்டத் தீர்மானத்தில் கோவை மாவட்டத்தின் மையப் பகுதியான நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



ஆனால் இதுவரை அம்பேத்கர் சிலை நிறுவப்படவில்லை என்பதால் உடனடியாக அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.



இது குறித்து மனு அளிக்க வந்த ஒற்றுமை மேடை அமைப்பினர் கையில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏந்தியவாறு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...