நிறுவப்படாத அம்பேத்கர் சிலை - கோவை ஆட்சியரிடம் ஒற்றுமை மேடை சார்பில் மனு

மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 16 ஆண்டுகள் ஆகியும் அம்பேத்கர் சிலை நிறுவப்படாத நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி பொதுக் கூட்டத் தீர்மானத்தில் கோவை மாவட்டத்தின் மையப் பகுதியான நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு அம்பேத்கர் சிலை நிறுவுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



ஆனால் இதுவரை அம்பேத்கர் சிலை நிறுவப்படவில்லை என்பதால் உடனடியாக அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.



இது குறித்து மனு அளிக்க வந்த ஒற்றுமை மேடை அமைப்பினர் கையில் அம்பேத்கர் புகைப்படத்தை ஏந்தியவாறு அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...