நாமக்கல்லில் நடைபெறும் சூதாட்ட விடுதி - கோவை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் தமிழ் புலிகள் கட்சி மனு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவங்காடு குடியிருப்பு பகுதியில் நடைபெறும் ராயல் ரெக்ரியேசன் கிளப் என்ற சூதாட்ட விடுதியால் மக்கள் பாதிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.


கோவை: ஈரோட்டை சேர்ந்த அதிமுக பிரமுகர் மற்றும் பவானியை சேர்ந்த அதிமுக பிரமுகர் இணைந்து நடத்தி வரும் சூதாட்ட விடுதியால் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக தமிழ் புலிகள் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவங்காடு குடியிருப்பு பகுதியில் ராயல் ரெக்ரியேசன் கிளப் என்ற சூதாட்ட விடுதி நடைபெற்று வருவதாகவும் இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கோவை மேற்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் "அந்த சூதாட்ட விடுதியை ஈரோட்டை சேர்ந்த அதிமுக பிரமுகர் மற்றும் பவானியை சேர்ந்த அதிமுக பிரமுகர் இணைந்து நடத்தி வருவதாகவும், அங்கு நாள்தோறும் சீட் ஆடுவதற்கு வெளி ஊர்களில் இருந்து வரும் நபர்களால் கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் தங்கள் கிராம மக்களையும் சீட்டு ஆடுவதற்கு அழைப்பதால் பலரும் வேலைகளுக்கு செல்லாமல் சீட்டு ஆடுவதற்கு செல்வதாக குறிப்பிட்டுள்ள அவர்கள் இதனால் பணங்களை இழந்து விடுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அந்த சூதாட்ட கிளப் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே அரவங்காடு அரசு பள்ளிக்கூடம் இருப்பதால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், அவ்வழியாக செல்லும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அச்சமாக இருப்பதாகவும் இது பற்றி பலமுறை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...