உலகளவில் நடைபெற்ற ராம்ப் வாக் போட்டி - முதலிடம் பிடித்த தமிழ்நாட்டு சிறுவர்

உலகளவில் நடைபெற்ற சிறுவர்களுக்கான ராம்ப் வாக் போட்டியில் கோவையைச் சேர்ந்த சிறுவன் முகமது நிஷார் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.



கோவை: தாய்லாந்தில் உலக அளவிலான Junior Model Fashion Show மற்றும் ராம்ப் வாக் நிகழ்ச்சி நடைபெற்றது.



அதில் பங்கேற்று இந்திய அளவில் கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் முகமது நிஷார் முதலிடம் பிடித்து அசத்தினார்.



வெற்றி பெற்று மீண்டும் கோவை திரும்பிய சிறுவன் முகமது நிஷாருக்கு ரயில்நிலையத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.



உலகளவில் போட்டியில் பங்கேற்று இந்தியா அளவில் முதலிடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக சிறுவனை புகழ்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிறுவன் தாயார்,



தனது மகனுக்கு மாடலிங் துறையில் அதிகளவில் விருப்பம் இருப்பதனால் 2 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் இதற்காக தனது மகனை சிறப்பு வகுப்பிற்கு அனுப்பி பயிற்சி எடுத்தாக கூறினார்.

தாய்லாந்தில் நடைபெற்ற உலகளவிலான ராம்ப் வாக்கில் போட்டியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறுவர்,சிறுமிகள் பங்கேற்றனர். அதில் இந்தியா அளவில் முதல் பரிசு பெற்று வெற்றி பெற்றுள்ளார் எனவும் 'Title Winner Award' வெற்றி வெற்று இந்தியா பெருமை சேர்ந்துள்ளதாக தெரிவித்தார். ஏற்கனவே தேசிய அளவிலான ராம்ப் வாக் போட்டியில் முகமது நிஷார் இந்தியா அளவில் இரண்டாம் பரிசு பெற்றவர் என குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...