ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் அமைப்புகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழக முதல்வரிடம் தங்களின் 7 அம்ச கோரிக்கையை ஆவணம் செய்ய கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் (குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்) மனு அளித்தனர்.


கோவை: தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களுக்கு பீக் அவர் கட்டணத்தை நீக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் ஆவணம் செய்யுமாறு ஆட்சியரிடம் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் மனு அளித்தனர்.



"குடிசை மற்றும் குறு மின் நுகர்வோர்களுக்கு Tariff 3A(1) மின் இணைப்பு அளிக்க வேண்டும், தாழ்வழுத்த மின் கட்டணங்களுக்கு 0-12KW- 20ரூ, 0-50KW- 35ரூ, 50-112 KW- 35ரூ, 112-150KW- 350ரூ என்பது தொழில்துறையினரால் எதிர்பார்க்கப்படுகிறது.

உயர் மின்னழுத்த பயன்பாட்டாளர்களுக்கான அதிகபட்ச கேட்பு கட்டணம் தற்பொழுது 562 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் முந்தைய கட்டணமான 350 ரூபாய்க்கே குறைக்கப்பட வேண்டும்.

தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களுக்கு பீக் அவர் கட்டணத்தை நீக்க வேண்டும். அதே சமயம் உயர் மின்னழுத்த பயனீட்டாளர்களுக்கு பீக் அவர் நேரம் நான்கு மணி நேரமாகவும், பீக் அவர் கட்டணம் 20% ஆகவும் குறைக்கப்பட வேண்டும்.

வருடாந்திர மின் கட்டண அதிகரிப்பு 1% இருக்க வேண்டும், சோலார் நெட்வொர்க்கிங் கட்டணம் நீக்கப்பட வேண்டும் மற்றும் நெட் மீட்டர் முறையில் அதிகப்படியாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் மின்சாரத்தை உபயோகிக்கும் மின்சாரத்திலிருந்து கழிக்கப்பட வேண்டும், 112-150KW உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆகிய 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இதனை முதல்வரின் கவனத்திற்கு ஆவணம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே முதல்வர் தங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.



இந்த ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அந்தந்த மாவட்ட தொழில் அமைப்புகள் முதல்வரின் கவனத்திற்கு இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருவதும் கோவையில் கதவடைப்பு போராடம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...