வால்பாறையில் 32 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா - AST சேகர் தலைமையில் சிலைகள் ஆற்றில் கரைப்பு

வால்பாறை உள்ள புதிய பேருந்து நிலையம், படகு இல்லம் வழியாக ஊர்வலமாக வந்த விநாயகர் சிலைகள் நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. வரும் வழியில் திரளான பக்தர்கள வழிபாடு நடத்தினர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 32 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை ஏ எஸ் டி சேகர் ஜி தலைமையில் 108 விநாயகர் சிலைகள் வால்பாறை டவுன் பகுதியில் ஊர்வலமாக சென்று நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன.

வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட் பகுதியில் உள்ளது. இந்த 62 எஸ்டேட் பகுதிகளிலும் இருந்து இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு எஸ்டேட்டிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு ஐந்து தினங்களாக போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைக்கு பூஜை செய்யப்பட்டது.



இதன் தொடர்ச்சியாக வால்பாறை பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு அனைத்து சிலைகளுக்கும் பூஜை செய்யப்பட்டு மாநில செயலாளர் சி எம் அண்ணாதுரை மற்றும் கோனார் நகைக்கடை வல்லிகண்ணு முன்னிலையிலும் நடத்தப்பட்டன. மாவட்ட துணை தலைவர் எஸ் டி சேகர் தலைவர் தலைமையில் 108 சிலைகள் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைக்கப்பட்டது.



வால்பாறை பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர், புதிய பேருந்து நிலையம், படகு இல்லம் வழியாக ஊர்வலமாக சென்று நடுமலை ஆற்றில் சிலைகளை கரைக்கப்பட்டன.



இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...