வால்பாறையில் 32 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா - AST சேகர் தலைமையில் சிலைகள் ஆற்றில் கரைப்பு

வால்பாறை உள்ள புதிய பேருந்து நிலையம், படகு இல்லம் வழியாக ஊர்வலமாக வந்த விநாயகர் சிலைகள் நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. வரும் வழியில் திரளான பக்தர்கள வழிபாடு நடத்தினர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 32 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை ஏ எஸ் டி சேகர் ஜி தலைமையில் 108 விநாயகர் சிலைகள் வால்பாறை டவுன் பகுதியில் ஊர்வலமாக சென்று நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன.

வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட் பகுதியில் உள்ளது. இந்த 62 எஸ்டேட் பகுதிகளிலும் இருந்து இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு எஸ்டேட்டிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு ஐந்து தினங்களாக போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைக்கு பூஜை செய்யப்பட்டது.



இதன் தொடர்ச்சியாக வால்பாறை பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு அனைத்து சிலைகளுக்கும் பூஜை செய்யப்பட்டு மாநில செயலாளர் சி எம் அண்ணாதுரை மற்றும் கோனார் நகைக்கடை வல்லிகண்ணு முன்னிலையிலும் நடத்தப்பட்டன. மாவட்ட துணை தலைவர் எஸ் டி சேகர் தலைவர் தலைமையில் 108 சிலைகள் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைக்கப்பட்டது.



வால்பாறை பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர், புதிய பேருந்து நிலையம், படகு இல்லம் வழியாக ஊர்வலமாக சென்று நடுமலை ஆற்றில் சிலைகளை கரைக்கப்பட்டன.



இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...