வால்பாறையில் 32 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா - AST சேகர் தலைமையில் சிலைகள் ஆற்றில் கரைப்பு

வால்பாறை உள்ள புதிய பேருந்து நிலையம், படகு இல்லம் வழியாக ஊர்வலமாக வந்த விநாயகர் சிலைகள் நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன. வரும் வழியில் திரளான பக்தர்கள வழிபாடு நடத்தினர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 32 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை ஏ எஸ் டி சேகர் ஜி தலைமையில் 108 விநாயகர் சிலைகள் வால்பாறை டவுன் பகுதியில் ஊர்வலமாக சென்று நடுமலை ஆற்றில் கரைக்கப்பட்டன.

வால்பாறை பகுதியில் 62 எஸ்டேட் பகுதியில் உள்ளது. இந்த 62 எஸ்டேட் பகுதிகளிலும் இருந்து இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு எஸ்டேட்டிலும் விநாயகர் சிலை வைக்கப்பட்டு ஐந்து தினங்களாக போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைக்கு பூஜை செய்யப்பட்டது.



இதன் தொடர்ச்சியாக வால்பாறை பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முன்பு அனைத்து சிலைகளுக்கும் பூஜை செய்யப்பட்டு மாநில செயலாளர் சி எம் அண்ணாதுரை மற்றும் கோனார் நகைக்கடை வல்லிகண்ணு முன்னிலையிலும் நடத்தப்பட்டன. மாவட்ட துணை தலைவர் எஸ் டி சேகர் தலைவர் தலைமையில் 108 சிலைகள் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைக்கப்பட்டது.



வால்பாறை பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர், புதிய பேருந்து நிலையம், படகு இல்லம் வழியாக ஊர்வலமாக சென்று நடுமலை ஆற்றில் சிலைகளை கரைக்கப்பட்டன.



இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...