அத்திக்கடவு தண்ணீர் வரவில்லை - சூலூர் கிராம மக்கள் 3 மணி நேரம் சாலை மறியல்

அத்திக்கடவு திட்டம் தண்ணீர் கோரி காலி குடத்துடன் பெண்கள் சாலையில் இறங்கி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சூலூர் மக்கள் மறியல் காரணமாக திருச்சி- பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமம் உள்ளது. ஊராட்சி தற்போது புதிய குடியிருப்புகள் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வருகிறது சுமார் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வசித்து வருகிறார்கள்

இந்நிலையில் இவர்களுக்கு அத்திக்கடவு தண்ணீர் மூலம் குடிநீர் தண்ணீரானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரானது 45 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தான் வரக்கூடிய சூழல் உள்ளது.

இதனால் அதிக தூரம் சென்று தண்ணீரை பிடித்து வரக்கூடிய சூழல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தொடர்ந்து இங்கு தண்ணீர் வரவில்லை என்பதால் பொதுமக்கள் திருச்சி பொள்ளாச்சி சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கையில் காலி குடத்துடன் திருச்சி மற்றும் பொள்ளாச்சி சாலையை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் வரும் வரை கலைய மாட்டோம் எனக்கூறி போலீசாரிடம், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அப் பகுதியில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் அப்பகுதியில் நின்று உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...