விஷால் மீது குற்றம்சாட்டுவதை சேரன் நிறுத்திக்கொண்டு படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என மிஷ்கின் சாடல்

விஷால் மீது குற்றம்சாட்டுவதை சேரன் நிறுத்திக்கொண்டு படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மிஷ்கின் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியான நம்ம அணி சார்பாக கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஷால், மிஷ்கின், ஞானவேல் ராஜா, பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால், 10 ஆண்டுகளாக தயாரிப்பாளர்களின் நலனுக்காக குரல் கொடுத்து எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் இந்த அணி தற்போது போட்டியிட போவதாகவும், இது தொடர்பாக கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தயாரிப்பாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு வெறும் தேர்தலுக்கான பிரச்சாரமாக மட்டும் இல்லாமல், சிதறிக்கிடக்கும் தயாரிப்பாளர்களை ஒன்றிணைத்து, தயாரிப்பாளர்களுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கி, தயாரிப்பாளர்கள் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து விஷாலின் தேர்தல் பிரச்சாரம் குறித்து சேரனின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த மிஷ்கின், மூத்த தயாரிப்பாளரான சேரன் ஏன் இவ்வாறு தனி மனிதனை தாக்குகிறார் என தெரியவில்லை எனவும், இது போன்று விஷால் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் வருத்தம் அளிப்பதாகவும் கூறினார்.

சேரன் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அதனை தெரிவிக்க விரும்பவில்லை எனக் கூறி மிஷ்கின், திரையுலகிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே தேர்தலில் களமிறங்கி உள்ளதாகவும், சேரன் குற்றச்சாட்டுவதை நிறுத்தி விட்டு, படம் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் சங்கத்தில் விஷால் பொறுப்பேற்ற பின்னர், அவர்கள் அளித்த வாக்குறுதியில் 90 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும், இன்னும் சில நாட்களில் நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறும் என தெரிவித்தார்.

இது போன்று தயாரிப்பளர் சங்க கோரிக்கைகளையும் நிறைவேற்றவே விஷாலை இத்தேர்தலில் ஆதரித்துள்ளதாகவும், ஒரு ஆண்டிற்குள் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பதவியில் இருந்து ராஜினாமா செய்வோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் திரையரங்குகள் அமைக்க அரசு சார்பாக அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதன் காரணமாக வட மாநிலங்களிடம் ஒப்பிடுகையில் மிக குறைந்த அளவிலான திரையரங்குகளே தமிழகத்தில் செயல்பட்டு வருவதாக தெரிவித்தவர். இதானால் வீடியோ பைரசியில் ஏற்படும் இழப்பு போல, குறைந்த திரையரங்குகளாலும் வருவாயை இழக்க நேரிடுவதாக கூறினார்.

இதே போன்ற சிக்கல்களை தீர்க்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...