பிரபல வனவிலங்கு ஆர்வலர் எஸ்.ஜெயச்சந்திரன் உதகையில் மாரடைப்பால் மறைவு - அவருக்கு வயது 65

பிரபல பாதுகாவலரும், வனவிலங்கு ஆர்வலருமான எஸ்.ஜெயச்சந்திரன் 65, மாரடைப்பால், உதகையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலமானார்.


உதகை: நீலகிரி வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் கெளரவ செயலாளராகவும், வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இந்தியா திட்டத்தின் நீண்டகால பங்காளியாகவும் பணியாற்றிய எஸ்.ஜெயச்சந்திரன் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் நிலப்பரப்புகளின் காடுகளையும் வனவிலங்குகளையும் சுமார் 30 ஆண்டுகளாக பாதுகாக்க பாடுபட்டார் எஸ்.ஜெயச்சந்திரன்.

அவர் 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு பசுமை இயக்கம் (TNGM) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இது நீலகிரியில் தொழில்துறையின் வருகை மற்றும் மர மாஃபியாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியது.

இதனையடுத்து, நீலகிரி வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் கெளரவ செயலாளராகவும், வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இந்தியா திட்டத்தின் நீண்டகால பங்காளியாகவும் அவர் பணியாற்றினார். இந்நிலையில்,உதகையில் உள்ள இல்லத்தில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...