சனாதனம் குறித்து பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் சட்டரீதியாக சந்தித்தாக வேண்டும் - கோவையில் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்து விட்டு, நாடாளுமன்றத்திற்கு நடிகை வருவதை தவறு என சொல்வது சரியா என்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.



கோவை: நாடு வேகமாக முன்னேறுவதற்கு மகளிர் இட ஒதுக்கீடு முதல் படி. இதனை இந்தியாவில் உள்ள பெண்கள் கொண்டாட வேண்டும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,



பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நாடு வேகமாக முன்னேறுவதற்கு இந்த இட ஒதுக்கீடு முதல் படி. இதனை இந்தியாவில் உள்ள பெண்கள் கொண்டாட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றும் நடக்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் சொல்வது சரியில்லை.

உயர்கல்வி மருந்துவப்படிப்பில் சற்று ஏறக்குறைய 70 ஆயிரம் இடங்கள் உள்ளது. அதில் 4 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது. ஜீரோ பர்சண்டேஜ் என்பது இந்தாண்டு காலியிடங்களை நிரப்ப ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனை வைத்து நீட் தேவையில்லை என்பது தவறு. மருத்துவக்கல்லூரிகள், மருத்துவ படிப்புகள் அதிகமாகி‌ இருப்பதால் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறது. மருத்துவ உயர் கல்வி பயிற்றுவிக்க ஆசிரியர் கிடைக்கவில்லை.

மேலும் இதில் ஜீரோ ஜீரோ என சொல்லக்கூடாது. மருத்துவ உயர்கல்வியை சீரமைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கவுன்சிலிங் செல்லும் போது தகுதியான மருத்துவர்களுக்கு தான் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே இதனால் தனியார் மருத்துவ கல்லூரிகள் பலனடையும் என்பது சரியல்ல. அரசுக் கல்லூரிகளும் பலனடையும்.

தனியார் கல்லூரிகளும் பலனடையும். இதனை வைத்து அநாவசியமாக அரசியல் செய்யக்கூடாது.சனாதனம் ஒழிப்பு என்றவர்கள் ஏன்‌ மத, சாதி வேறுபாடுகளை பேசுகிறார்கள்?. நலம் பயின்ற பள்ளிகளில் மலம் கலக்கப்படுகிறது ஏன்?.

இதற்கு முன்பு எப்போது இப்படி நடந்தது?. இந்துக்கள் படிக்க மற்றவர்கள் காரணம் என சபாநாயகர் சொல்வது நியாயமா என நீங்கள் சொல்லுங்கள். இப்படி பிரிவினையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

சனாதனம் குறித்து பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும். அநாவசியமான சத்தம் போடாமல் போட்டால் சட்டரீதியாக சந்தித்து தான் ஆக வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. பேசியது தவறு தான், இதற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை நிகழ்த்தும் போது, குடியரசு தலைவர் அழைக்கப்படுவார்.

உதயநிதி ஸ்டாலின் நடிகராக இருந்து விட்டு, நாடாளுமன்றத்திற்கு நடிகை வருவதை தவறு என சொல்வது சரியா?. தான் இவரது பொது நோக்கு?. இன்று குடியரசு தலைவருக்கு ஆதரவு தெரிவித்து பேசுபவர்கள், குடியரசு தலைவராக ஏன் போட்டியிட்ட போது ஏன் ஆதரிக்கவில்லை?.

பெண்கள், பழங்குடியினர், கீழ்நிலையில் இருப்பவர்கள் முன்னுக்கு வர அங்கீகாரம் தர வேண்டும். நீங்கள் ஓட்டு போட்டு ஜனாதிபதி வெற்றி பெறவில்லை. ஜனாதிபதியாவதற்கு பிரதமர் தான் காரணம் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...