தாராபுரம் உணவகங்களில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை - கெட்டு போன உணவு குறித்து ஆய்வு

திருப்பூர் மாவட்டம் தாரபுரம் நகராட்சியில் இயங்கி வரும் ஷவர்மா கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் உணவுப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் அசைவ உணவகங்கள் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து தகவல் கிடைத்தது.

அதன்படி திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், தாராபுரம் பகுதி உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் சிரஞ்சீவி, பாலமுருகன், கோடீஸ்வரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தாராபுரம் பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை, அலங்கியம் சாலை, ஐந்து சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், பாஸ்ட்புட் கடைகள், ஷவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஆய்வில் அதிக செயற்கை வண்ணம் கலக்கப்பட்ட 3 கிலோ சிக்கன், 2 கிலோ அளவிலான பரோட்டா, 3 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.



பின்னர், உணவக உரிமையாளர்களிடம் நாள்தோறும் புதிதாக வாங்கப்பட்ட சிக்கன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் அசைவ உணவகங்களில் தரமற்ற சிக்கன் மற்றும் உணவுப் பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டால் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...