தாராபுரம் உணவகங்களில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை - கெட்டு போன உணவு குறித்து ஆய்வு

திருப்பூர் மாவட்டம் தாரபுரம் நகராட்சியில் இயங்கி வரும் ஷவர்மா கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் உணவுப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் அசைவ உணவகங்கள் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து தகவல் கிடைத்தது.

அதன்படி திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், தாராபுரம் பகுதி உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் சிரஞ்சீவி, பாலமுருகன், கோடீஸ்வரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தாராபுரம் பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை, அலங்கியம் சாலை, ஐந்து சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், பாஸ்ட்புட் கடைகள், ஷவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஆய்வில் அதிக செயற்கை வண்ணம் கலக்கப்பட்ட 3 கிலோ சிக்கன், 2 கிலோ அளவிலான பரோட்டா, 3 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.



பின்னர், உணவக உரிமையாளர்களிடம் நாள்தோறும் புதிதாக வாங்கப்பட்ட சிக்கன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் அசைவ உணவகங்களில் தரமற்ற சிக்கன் மற்றும் உணவுப் பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டால் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...